tamilnadu

img

அதிக முட்டைசாப்பிடும் போட்டியில் பங்கேற்ற நபர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக முட்டை சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மார்க்கெட்டில் சுபாஷ்(42) தன் நண்பரை சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது 50 முட்டைகளை சாப்பிடுபவருக்கு 2,000 செலுத்த வேண்டும் என போட்டி ஏற்பட்டது.  இந்த போட்டியில்கலந்து கொண்ட சுபாஷ் 41 முட்டைகளை சாப்பிட்டார். 42 வது முட்டையை சாப்பிடும்போது திடீரென நிலைகுலைந்து மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.